ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தான் நரகம்!! எங்கோ படித்தது..எவ்வளவு உண்மை இது!
ஒரு பேருந்தில் ஏறினால்,தனியாக யாரும் இல்லாத சீட்டில் தானே தேடி அமர்கிறோம்?தப்பி தவறி யாரேனும் வந்து உட்கார்ந்தால், ஹய்யோ எப்போ இறங்குவனோ என்று தானே தோன்றுகிறது? மூன்று நான்கு மணி நேரம் தனியாக கூட இருக்க முடியும்..அனால் சக மனிதனை சகித்து கொள்ள இயல வில்லை.. ஏன்?
எங்க போனாலும் கூட்டம்,நெரிசல் என்ற வேதனை நெஞ்சை விட்டு அகல்வதில்லை..நாமும் அந்த கூடத்தில் ஒருவர் தான் என்ற உண்மையை மறந்து விட்டோம்..
இந்த உலகில் அனைவர்க்கும் கவலைகள் உண்டு,பிரச்சனைகள் உண்டு,தேவைகள் உண்டு..சிலருக்கு பூர்த்தி ஆகின்றது..சிலருக்கு ஆவதில்லை.பலர் வாழும் வாழ்க்கையை கவலைகள் கொண்டு நிரப்பி, நரகத்தை அமைத்து கொண்டு துன்பபடுகின்றனர்.
மனிதர்களை எதிர்ப்படும் போது ஒரு சிறு புன்னகை பூக்கலாமே..ஒரு நன்றி சொல்லலாமே..பேருந்து நடத்துனர்,மளிகை கடை அண்ணாச்சி,ஷாப்பிங் மால் பில் கவுன்டரில் அமர்ந்திருப்பவர்,ஆட்டோ ஓட்டுனர்,பெட்ரோல் போடுபவர்,சக்கரத்தில் காற்று நிரப்புபவர் என இப்படி பல பேரை சந்திக்கிறோம்..அனைவரிடமும் நமது நன்றியையும் மனிதத்தையும் வெளிப்படுத்துவோம்.
குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் என் நண்பர்களே, சாலையில் யாரேனும் செய்த தவறால் உங்கள் நேரம் பாதிக்க பட்டால்,தயவு செய்து வார்த்தையால் ஒரு மனிதனை புண்ணாக்காதீர்கள்.அவன் தன் வாழ்வில் கடந்து வருகின்ற இன்னல்கள் என்னவென்று உங்களுக்கு தெரியாது..
உங்கள் மேலதிகாரிகள் செய்கின்ற தவறுகளை நீங்கள் இதே போல் தட்டி கேட்பீர்களா?? கண்டிப்பாக மாட்டீர்கள்..
நாம் வெளிநாட்டில் வாழும் போது இந்தியனை கண்டால்(அவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவனக இருந்தாலும்) சந்தோஷம். வெளி மாநிலத்தில் வாழும் போது நம் மாநிலவனை கண்டால் சந்தோஷம். நம் ஊரில் வாழும் போது,நம் ஜாதியவனை கண்டால் சந்தோஷம்.இப்படி பிளவு பட்டுதான் கிடக்கிறோம்.என் நாடு,என் மக்கள்,என் மாநிலம்,என் மொழி,என் ஊர்,என் தெரு,என் சாதி என வாழ்வில் சிறு வட்டம் போட்டுகொண்டு வாழ வேண்டாம்..
அன்பு என்பது நம் உறவினர்கள் ,நண்பர்களுக்கு மட்டும் அல்ல..அது இந்த உலகில் வாழும் அனைவருக்கும் நாம் கொடுக்க வேண்டியது..
நாட்டு பற்று வேண்டும் தான்.அதை விட பெரிது மனிதநேயம் என்று நினைக்கிறேன்!!